செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மதியம் காந்திநகர் அருகே உள்ள பிச்சனேரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்திநகரை சேர்ந்தவர் மாரி(வயது 35). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மதியம் காந்திநகர் அருகே உள்ள பிச்சனேரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.