செய்திகள்
பரங்கிமலையில் பைக் ரேஸ் தகராறில் வாலிபருக்கு வெட்டு
பரங்கிமலையில் பைக் ரேஸ் தகராறில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆலந்தூர், கொத்தவால் தெருவை சேர்ந்தவர் ஜமால் (21). இவர் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென ஜமாலை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜமாலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தை சேர்ந்த காணிக்கைராஜ், பிரபாகர் ஆகிய இருவரை கைது செய்தனர். பைக் ரேசில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.