கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை குத்தி கொல்ல முயன்ற பெண்
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் 11-வது தெருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அபுசாலி முஸ்தபா, அவரது மனைவி ருஸ்தானா பேகம் ஆகியோர் வசித்து வந்தனர்.
அபுசாலி முஸ்தபா வேளச்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவரும் அதே பகுதி கக்கன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தஜ்மல் அகமதுவும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த நிலையில் அபுசாலி முஸ்தபா வீட்டில் இல்லாத போது அவரது மனைவி ருஸ்தானா பேகத்துடன் தஜ்மல் அகமது பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த அபுசாலி முஸ்தபா அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். அப்போது தஜ்மல்அகமது வலுக்கட்டாயமாக வீட்டுக்கு வந்து பழகியதாக ருஸ்தானா பேகம் கணவரிடம் கூறினார்.
இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் தஜ்மல் அகமதுவை வீட்டிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அபுசாலி முஸ்தபாவும், ருஸ்தானா பேகமும் கத்தியால் தஜ்மல் அகமதுவை குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த தஜ்மல்அகமதுபுக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன், சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து அபுசாலி முஸ்தபா, அவரது மனைவி ருஸ்தானா பேகம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தற்போது ருஸ்தானா பேகம் 6 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.