செய்திகள்
செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் 68 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் செந்துறை தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுவினியோக திட்ட முதுநிலை ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல் மற்றும் 33 ரேஷன் கடை ஊழியர்களும், 2 பகுதி நேர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கணக்கில் வராத லஞ்ச பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திடீரென வந்த அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வானதி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து கூட்ட அரங்கை பூட்டினர்.
அதனை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ரேஷன் கடை ஊழியர்களின் கைப்பைகளை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.28 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையை அறிந்த தாலுகா அலுவலகத்திற்கு வந்து இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரமாக வெளியேறி விட்டனர். அலுவலகம் வராத ஊழியர்களும், அதிகாரிகளும் அலுவலகம் வராமல் தவிர்த்தனர். இதனால் நாள் முழுவதும் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். செந்துறை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையால் செந்துறை மற்றும் அரியலூர் மாவட்ட வருவாய் துறை மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் 68 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் செந்துறை தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுவினியோக திட்ட முதுநிலை ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல் மற்றும் 33 ரேஷன் கடை ஊழியர்களும், 2 பகுதி நேர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கணக்கில் வராத லஞ்ச பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திடீரென வந்த அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வானதி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து கூட்ட அரங்கை பூட்டினர்.
அதனை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ரேஷன் கடை ஊழியர்களின் கைப்பைகளை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.28 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையை அறிந்த தாலுகா அலுவலகத்திற்கு வந்து இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரமாக வெளியேறி விட்டனர். அலுவலகம் வராத ஊழியர்களும், அதிகாரிகளும் அலுவலகம் வராமல் தவிர்த்தனர். இதனால் நாள் முழுவதும் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். செந்துறை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையால் செந்துறை மற்றும் அரியலூர் மாவட்ட வருவாய் துறை மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.