செய்திகள்
மாடுகளுடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருமானூரில் மாடுகளுடன் பொதுமக்கள் மறியல்

Published On 2020-01-23 22:09 IST   |   Update On 2020-01-23 23:23:00 IST
திருமானூரில் புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதை சரி செய்ய கோரி மாடுகளுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சார்ந்த சேனாபதி கிராமத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதை சரி செய்யவும், மின்சாரம் அடிக்கடி தடைபடுவதை சரி செய்யவும், குடிநீர் மற்றும் சுடுகாடு செல்லும் சாலைகளை சரி செய்யக்கோரியும் சேனாபதி காலனி பொதுமக்கள் தங்களது வளர்ப்பு மாடுகளுடன் சாலைகளின் குறுக்கே மரங்களை போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த திருமானூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சேனாபதி காலனி ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News