செய்திகள்
மணமேல்குடி கோடியக்கரையில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி
மணமேல்குடி கோடியக்கரையில் கடலில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:
மணமேல்குடி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, இறந்த உறவினர் ஒருவருக்கு 16-ம் நாள் காரியம் செய்வதற்காக, உறவினர்களுடன் சேர்ந்து மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு காரியம் முடிந்த பின்னர், கடலில் சந்திரன் குளித்து கொண்டிருந்தார்.
மணமேல்குடி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, இறந்த உறவினர் ஒருவருக்கு 16-ம் நாள் காரியம் செய்வதற்காக, உறவினர்களுடன் சேர்ந்து மணமேல்குடி கோடியக்கரை கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு காரியம் முடிந்த பின்னர், கடலில் சந்திரன் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட சந்திரன், காப்பாற்றுமாறு அபாயகுரல் எழுப்பினார். அங்கிருந்த உறவினர்கள், சந்திரனை மீட்க முயன்றனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் சந்திரன் கடலில் மூழ்கி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரோந்து படகில் கடலுக்குள் சென்று சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.