செய்திகள்
பெண்ணாடம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்:
திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கடலூரை சேர்ந்த அருள்நாதன் (வயது 56) என்பவர் ஓட்டி வந்தார். ராமதாஸ் (56) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ் நள்ளிரவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. உடனே டிரைவர் அருள்நாதன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.
உடனே டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி கல்வீசிய வாலிபரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டரும், டிரைவரும் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ் மூலம் கடலூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை கடலூரை சேர்ந்த அருள்நாதன் (வயது 56) என்பவர் ஓட்டி வந்தார். ராமதாஸ் (56) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
அந்த பஸ் நள்ளிரவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கூடலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரமாக நின்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார்.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. உடனே டிரைவர் அருள்நாதன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.
உடனே டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி கல்வீசிய வாலிபரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டரும், டிரைவரும் ஆவினங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ் மூலம் கடலூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் மீது கல்வீசி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.