செய்திகள்
பாஜக

காட்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2019-12-21 17:14 IST   |   Update On 2019-12-21 17:14:00 IST
வேலூர் மாவட்டம் காட்டிபாடியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெகன்நாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா கலந்து கொண்டனர்.

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரை கண்டித்தும் பொய் பிரசாரத்தை நிறுத்த கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

இதில் கோட்ட பொறுப்பாளர்கள் பிரகாஷ், ரமேஷ், ஓ.பி.சி.யின் மாநில செயலாளர் பாபாஸ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், பிச்சாண்டி, மாவட்ட பொதுச்செயலர்கள் பாஸ்கர், வாசு, மாவட்ட செயலாளர், பாபு, இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், ராஜேஷ், ஏழுமலை, மாநகர மண்டல தலைவர்கள் கமல வினாயகம், சீனிவாசன், மோகன், நந்தகுமார் ஜெகன், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.

Similar News