செய்திகள்
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்ட பெண்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
2019-2020-ம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படும்.
விருது பெறுவதற்கு கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் சிவகங்கை, மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
2. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை. மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுதல்.
இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது முதலமைச்சரால் வழங்கப்படும் என சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
2019-2020-ம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படும்.
விருது பெறுவதற்கு கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் சிவகங்கை, மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
2. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை. மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுதல்.
இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது முதலமைச்சரால் வழங்கப்படும் என சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.