செய்திகள்
கொலை

காரைக்குடி அருகே டெய்லர் கழுத்து அறுத்துக்கொலை

Published On 2019-12-17 16:06 IST   |   Update On 2019-12-17 16:06:00 IST
காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் டெய்லரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பழைய செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவரது மனைவி சின்னபொன்னு. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.

செல்வராஜ் புளியமரத்தடி பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற செல்வராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது காட்டம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News