செய்திகள்
விபத்தில் நொறுங்கிய கார்

நாட்டறம்பள்ளி அருகே கார் தடுப்பில் மோதி 8 பேர் படுகாயம்

Published On 2019-12-15 15:59 GMT   |   Update On 2019-12-15 15:59 GMT
நாட்டறம்பள்ளி அருகே சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்றம்பள்ளி:

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் தனது குடும்ப நண்பர்கள் 8  பேருடன் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காரில் புறப்பட்டு சென்றனர். 

காரை விஜயன் ஓட்டி சென்றார். நிகழ்ச்சி முடிந்து இன்று காலை ஓசூரில் இருந்து குடியாத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை அருகே கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த 8 பேரும் படுகாய மடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News