செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னைக்கு வந்த 31 விமான பயணிகளிடம் 6.5 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2019-11-25 10:23 GMT   |   Update On 2019-11-25 10:23 GMT
சென்னைக்கு வந்த 31 விமான பயணிகளிடம் 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்:

இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை விமானம் ஒன்று வந்தது. இதில் 184 பயணிகள் இருந்தனர். இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 31 பயணிகள் தங்களது உள்ளாடை, கைப்பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்களிடம் 6½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ கோடியாகும். 31 பயணிகளும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

ஒரே விமானத்தில் 31 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்துள்ளதால் இதன் பின்னணியில் தங்கம் கடத்தல் கும்பல் இருக்கும் என்று சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். தங்கம் கொண்டு வந்த 31 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News