செய்திகள்
மரணம்

ஈரோடு அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2019-11-23 16:32 IST   |   Update On 2019-11-23 16:32:00 IST
ஈரோடு அருகே பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அட்டவணை அனுமன்பள்ளி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் முருகன்(47). விவசாய கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று அரச்சலூர் சின்னக் கிணத்துப்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலைக்கு சென்றார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகனை பாம்பு கடித்து விட்டது.

இதைத்தொடர்ந்து முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News