செய்திகள்
கைது

பொதுமக்களிடம் பணம் வசூல் - போலி போலீஸ்காரர் கைது

Published On 2019-11-21 10:25 GMT   |   Update On 2019-11-21 10:25 GMT
பவானி அருகே போலீஸ் என்று போலி ஐடி கார்டை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பவானி:

பவானி அடுத்து மூன்று ரோடு பகுதியில் ஒருவர் தான் போலீஸ் என்று போலி ஐடி கார்டை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யும் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின்படி பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பொன் நகர் ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் கருணாநிதி 40 என தெரியவந்தது.

மேலும் இவர் சேலத்தில் ஓம் கார்டாக வேலை செய்து வந்துள்ளார்.

Tags:    

Similar News