செய்திகள்
சித்தோடு அருகே பரிதாபம் - பட்டதாரி வாலிபர் தற்கொலை
சித்தோடு அருகே வேலை கிடைக்காததால் மனவேதனையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 30) கல்லூரி படிப்பு படித்துள்ளார்.
இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கச் சென்ற கோகுலகிருஷ்ணன் இன்று காலை நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் தந்தை கதவை தட்டிய போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பழனிசாமி சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 30) கல்லூரி படிப்பு படித்துள்ளார்.
இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கச் சென்ற கோகுலகிருஷ்ணன் இன்று காலை நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் தந்தை கதவை தட்டிய போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பழனிசாமி சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.