செய்திகள்
போதிய ஆசிரியர்கள் இல்லை - சீருடையுடன் மனு கொடுக்க வந்த பள்ளி மாணவர்கள்
50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் கலெக்டரை சந்தித்து போதிய ஆசிரியர்கள் இல்லை என மனு கொடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
நாங்கள் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறோம் இங்கு 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 160 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.
எங்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே பயிற்று வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது எனவே எங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் தங்களது பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
நாங்கள் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறோம் இங்கு 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 160 மாணவ மாணவிகள் தற்போது படித்து வருகின்றனர்.
எங்களுக்கு ஒரு தலைமை ஆசிரியரும் ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டுமே பயிற்று வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது எனவே எங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.