செய்திகள்
தற்கொலை

பவானிசாகர் அருகே ஜவுளி தொழிலாளி தற்கொலை

Published On 2019-11-11 10:25 GMT   |   Update On 2019-11-11 10:25 GMT
பவானிசாகர் அருகே ஜவுளி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் குமரன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). ஆறுமுகம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஆறுமுகம் திடீரென வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து அவரிடம் கேட்டனர். அப்போது தான் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஆறுமுகம் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News