செய்திகள்
மரணம்

கோபி அருகே வாய்க்காலில் குளித்த அரசு போக்குவரத்து ஊழியர் பலி

Published On 2019-11-08 12:18 GMT   |   Update On 2019-11-08 12:18 GMT
கோபி அருகே வாய்க்காலில் குளித்த அரசு போக்குவரத்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). நம்பியூர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி காயத்ரி, மகன் பிரேம்குமார். இவர்கள் 3 பேரும் கீழ்பவானி வாய்க்கால் இரட்டை பாலம் என்ற இடத்துக்கு குளிக்க சென்றனர்.

வாய்க்காலில் காயத்ரி துணி துவைத்து கொண்டிருந்தார். மகன் வாய்க்கால் கரையோரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ராமசாமி வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலை பார்த்து மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News