செய்திகள்
கூடலூரில் விபத்து - மாணவர்கள் 2 பேர் பலி
கூடலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
கூடலூர் கோழிபாலத்தை சேர்ந்தவர் குணசீலன் (20) கூடலூர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த கலைசெல்வன் (18) கூடலூர் தோட்ட தொழிலாளர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று 2 பேரும் தனது நண்பர்கள் 2 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு சென்று இறைச்சி வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நந்தட்டி முருகன் கோவில் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக குணசீலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்த நண்பர் மோட்டார் சைக்கிளில் இடித்து முன்னாடி சென்ற லாரி டயரில் சிக்கியது.
இதில் படுகாயமடைந்த குணசீலன், கலைசெல்வன், 2 பேரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கூடலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் கோழிபாலத்தை சேர்ந்தவர் குணசீலன் (20) கூடலூர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த கலைசெல்வன் (18) கூடலூர் தோட்ட தொழிலாளர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று 2 பேரும் தனது நண்பர்கள் 2 பேருடன் 3 மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு சென்று இறைச்சி வாங்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நந்தட்டி முருகன் கோவில் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக குணசீலன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அருகில் வந்த நண்பர் மோட்டார் சைக்கிளில் இடித்து முன்னாடி சென்ற லாரி டயரில் சிக்கியது.
இதில் படுகாயமடைந்த குணசீலன், கலைசெல்வன், 2 பேரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கூடலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.