செய்திகள்
கோத்தகிரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மார்வாளா அடுத்துள்ள அத்திகம்பையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துமாரி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மனம் உடைந்து காணப்பட்ட முத்துமாரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது தந்தை பால்ராஜ் இது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மார்வாளா அடுத்துள்ள அத்திகம்பையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துமாரி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அங்கு மனம் உடைந்து காணப்பட்ட முத்துமாரி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவரது தந்தை பால்ராஜ் இது குறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.