செய்திகள்
கைது

சிவகிரியில் தேங்காய் கடையில் திருடிய வாலிபர்கள் கைது

Published On 2019-10-22 16:13 GMT   |   Update On 2019-10-22 16:13 GMT
சிவகிரியில் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி

சிவகிரி அருகே உள்ள சிவலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த தங்கம் மகன் தங்கமணி (25) என்பவரும் நண்பர்கள். 

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 20-ந்தேதி இரவு சிவகிரி மேலரதவீதியில் உள்ள முனியாண்டி என்பவரின் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து அங்கு இருந்த பணம், தேங்காய் மற்றும் சில பொருட்களை திருடிவிட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  சங்கரன்கோவில் இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரையும் அழைத்து விசாரித்தார்.

விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரனாக பதில் கூறியதால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  அங்கு வைத்து விசாரித்ததில் இருவரும் தேங்காய் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் தங்கமணியை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சங்கரன்கோவில் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
Tags:    

Similar News