செய்திகள்
பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்

குன்னூரில் இன்று காலை 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்

Published On 2019-10-22 15:19 IST   |   Update On 2019-10-22 15:19:00 IST
குன்னூரில் இன்று காலை லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதி 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது. பஸ்சில் சிக்கி தவித்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குன்னூர்:

மதுரையில் இருந்து ஊட்டிக்கு 25 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே உள்ள காட்டேரி பூங்கா அருகே ஒரு வளைவில் அந்த பஸ் வந்தபோது எதிரே ஒரு லாரி வந்தது.

லாரிக்கு வழிவிட முயன்றபோது பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோதியது. சுவர் இடிந்து 20 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 20 அடி பள்ளத்தில் சிக்கி தவித்த 25 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு 25 பேரையும் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது தவிர இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

Similar News