செய்திகள்
பலி

ஈரோட்டில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

Published On 2019-09-29 19:10 IST   |   Update On 2019-09-29 19:10:00 IST
ஈரோட்டில் பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி

ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையம் மாருதிநகரை சேர்ந்தவர் குமார் (வயது 25). மேல் நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்.

இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக அவர் அருகில் உள்ள மெடிக்கல் கடையில் மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. இந்நிலையில் குமாரின் உடல்நிலை மோசமானது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலருக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதி அடைந்து வருகிறார்கள்.

Similar News