செய்திகள்
தீக்குளித்து தற்கொலை

கோபி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-27 09:41 GMT   |   Update On 2019-09-27 09:41 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி மேட்டுவளவு சுப்பணன் வீதியை சேர்ந்தவர் பச்சியப்பன்(48). தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (44). பாப்பாத்தி அவரது கணவருடன் குடும்ப பிரச்சனை தொடர்பாக கோபித்து கொண்டு கோபி மாதேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள அவரது அண்ணன் முத்துச்சாமி வீட்டிற்கு சென்றார். பின்னர் சமாதானம் அடைந்து, அவரது வீட்டிற்கு சென்றார். 

இருப்பினும் மனவேதனையில் இருந்த பாப்பாத்தி, சம்பவத்தன்று இரவு வீட்டின் அறையை உட்புறமாக தாழிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாத்தியின் அண்ணன் முத்துச்சாமி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News