செய்திகள்
கடன் தொல்லை - விஷம் குடித்து வாலிபர் பலி
ஈரோடு அருகே கடன் தொல்லையில் வாலிபர் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டம்பரப்பு பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 38) இவரது மனைவி ஷோபனா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
அருண் சோலார் பகுதி மாணிக்கவாசகர் காலனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெயரில் கடையை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அருண் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர் இதனால் அருண் நெருக்கடியில் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அருண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டம்பரப்பு பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் அருண் (வயது 38) இவரது மனைவி ஷோபனா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
அருண் சோலார் பகுதி மாணிக்கவாசகர் காலனியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெயரில் கடையை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அருண் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர் இதனால் அருண் நெருக்கடியில் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அருண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றும் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.