செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு மாவட்ட பகுதியில் செக்மோசடி வழக்கில் 68 பேர் கைது

Published On 2019-09-26 15:55 IST   |   Update On 2019-09-26 15:55:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு செக்மோசடி வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 68 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு சக்தி கணேசன் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதைப் போன்று பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு செக்மோசடி வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 68 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதேபோன்று தொடங்கு செக்மோசடியில் ஈடுபட்ட தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சந்தேகப்படும்படி யாரும் நடமாடினால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

Similar News