பெருந்துறையில் குளம் தூர்வாரும் பணி: தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பெருந்துறை:
பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே அமைதி பூங்கா பின்புறம் சின்ன வேட்டுவ பாளையம் செல்லும் வழியில் சுமார் 20 ஏக்கரில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை ஈரோடு சக்தி மசாலா நிதி உதவியுடன், தூர் வாருவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சக்தி மசாலா நிறுவனர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து குளம் தூர்வாருவதற்கான மராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தாசில்தார் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் கிருஷ்ணன், கணேசன், அக்னி ஸ்டீல்ஸ் சின்னச்சாமி, வி.ஐ.டி செந்தில்நாதன், ஆண்டாள் பேப்பர்ஸ் சுப்பிரமணி, கொங்கு பள்ளி தாளாளர் சென்னியப்பன், சண்முகம்.
ம.தி.மு.க. கந்தசாமி, த.மா.கா. நகர செயலாளர் திரு மூர்த்தி, பல்லவி பரமசிவம், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், அவைத்தலைவர் சந்திர சேகரன், வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், அருள்ஜோதி செல்வராஜ், நகர செயலாளர் கல்யாண சுந்தரம், கே.எம்.பழனிச்சாமி, துரைராஜ், கேபிள் துரை, ஏ.வி.பால கிருஷ்ணன், பி.சுப்பிரமணியம், ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ரவி, சண்முகம், சங்கர், மோகன்குமார், கருப்புசாமி, தங்கமுத்து, பழனிச்சாமி, தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.