செய்திகள்
திமுக

5, 8-ம் வகுப்புக்கு பொது தேர்வை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-18 09:50 GMT   |   Update On 2019-09-18 09:50 GMT
5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு:

5, 8-ம் வகுப்பு பொது தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வைக்காதே வைக்காதே தன்மானத்தை அடகு வைக்காதே... வைக்காதே வைக்காதே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைக்காதே...” என்று கோ‌ஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி “இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் நடைபெறும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அதன்படி ஈரோடு காளைமாடு சிலை அருகே வரும் 20ஆம் தேதி ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

Tags:    

Similar News