செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகபட்சமாக 40.2 மி.மீ. மழை கொட்டியது.
இதனால் ரோட்டோரம் மழை தண்ணீர் ஓடியது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் பவானி கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, கோபி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது.
இதே போல் அணைப்பகுதிகளான கொடிவேரி அணை, வரட்டுப்பள்ளம் அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் மழை பெய்தது. குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.