செய்திகள்
விஷம்

கோபி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2019-09-17 03:56 GMT   |   Update On 2019-09-17 03:56 GMT
கோபி அருகே ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:

கோபி அருகே உள்ள ஒற்ற கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நிர்மலா தேவி (வயது 30).

நிர்மலாதேவி ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வந்தார். இதில் அவர் பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த நிர்மலாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது வி‌ஷம் குடித்து விட்டார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Tags:    

Similar News