செய்திகள்
ஜவுளி கடை பெண் ஊழியர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்
ஈரோடு அருகே ஜவுளி கடை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கல்பனா (வயது 19).10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ஒரு தனியார் துணிக்கடையில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு கொண்டார். கதவு நீண்ட நேரம் திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு உள்பக்கமாக தாள் போட பட்டு இருந்தது. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்பனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கல்பனா (வயது 19).10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ஒரு தனியார் துணிக்கடையில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு கொண்டார். கதவு நீண்ட நேரம் திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கதவு உள்பக்கமாக தாள் போட பட்டு இருந்தது. கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்பனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.