செய்திகள்
மகன்களுடன் பெண் மாயம்

பெருந்துறை அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்

Published On 2019-09-07 10:25 GMT   |   Update On 2019-09-07 10:25 GMT
பெருந்துறை அருகே 2 மகன்களுடன் பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது 2 மகன்களை தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:

பெருந்துறை அடுத்த பெரிய வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது 29). இவரது மனைவி சங்கீதா (25) இவர்களுக்கு விலோம் (5), ஷெர்பின் (1) ஆகிய 2 மகன்கள் உள்னர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

அவரை ஜேம்ஸ் ராபர்ட் தனது உறவினர்கள், அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஜேம்ஸ் ராபர்ட் புகார் அளித்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதா மற்றும் அவரது 2 மகன்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News