செய்திகள்
தற்கொலை

டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-09-07 10:10 GMT   |   Update On 2019-09-07 10:10 GMT
டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தோடு:

ஆப்பக்கூடல் சக்தி நகர் காந்தி வீதியில் வசிப்பவர் கிருஷ்ணன் மகன் செந்தில் (வயது 40). இவர் பவானி அருகிலுள்ள சித்தோடு ஆவின் பால்பண்ணை எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு செந்தில் கடையை மூடிவிட்டு கடையின் உள்ளே தாழிட்டுக் கொண்டு தூங்கினார்.

இன்று காலை கடையை திறக்க வந்த கோவிந்தசாமி பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவம் இடத்துக்கு வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செந்தில் இறந்து கிடந்தார்.

செந்திலின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இறந்த செந்திலுக்கு உதயா என்ற மனைவியும், ஹேம்நாத் (10), நந்தா (7) என்ற 2 மகன்களும் உள்ளனர். செந்திலுக்கு கடன் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News