செய்திகள்
விஷம்

பெருந்துறை அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து மரணம்

Published On 2019-09-07 09:59 GMT   |   Update On 2019-09-07 09:59 GMT
பெருந்துறை அருகே வேலை இல்லாததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பள்ளிபாளையம் ஆவுத்திபாளையம் கண்ணகி வீதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் தன்ராஜ் (வயது 57). இவர் தனது மனைவி பாப்பு மற்றும் மகனுடன் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறார்.

மனைவி பாப்புவும் மகனும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான பால் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். தன்ராஜ் அதே பகுதியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் காலில் ஆணி உள்ளதால் நின்று கொண்டே டீ போட முடியாதால் வேலையில் இருந்து நின்று விட்டார்.

வேலை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் மனைவி வேலை பார்க்கும் பால் கடைக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கிக் கொண்டு பால் கடைக்கு வெளியே நின்று கையில் வைத்திருந்த மூன்று வி‌ஷ மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு விட்டார்.

வி‌ஷ மாத்திரைகளை சாப்பிடுவதை கண்ட மனைவியும் மகனும் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்ராஜை சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News