செய்திகள்
விபத்து

ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற காண்டிராக்டர் வேன் மோதி பலி

Published On 2019-09-06 17:38 GMT   |   Update On 2019-09-06 17:38 GMT
ஆப்பக்கூடல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற காண்டிராக்டர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). அரசு ஒப்பந்த காண்டிராக்டராக இருந்தார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வரட்டுப்பள்ளம் சின்னதுரை தோட்டம் அருகே ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த ஒரு ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலையில் அடிப்பட்ட அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News