செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டம் - ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2019-07-30 00:05 GMT   |   Update On 2019-07-30 00:05 GMT
சட்டம்-ஒழுங்கு பற்றி பேச திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆம்பூர் :

வேலூர் பாராளுமன்ற தொகுதி ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதி பூங்காவாக உள்ளது. கம்யூனிஸ்டு லீலாவதியை கொலை செய்தது யார்?. ஸ்டாலின் மதுரை சென்றபோது அவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவமும் நடந்தது.

இதை எல்லாம் மு.க.ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம்-ஒழுங்கு கேலிகூத்தாக இருந்தது. சட்டம்-ஒழுங்கு பற்றி பேச அவருக்கு தகுதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News