செய்திகள்
தற்கொலை

சென்னிமலை அருகே மனைவியுடன் தகராறு - தொழிலாளி தற்கொலை

Published On 2019-07-23 10:20 GMT   |   Update On 2019-07-23 10:20 GMT
ஈரோடு சென்னிமலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு சென்னிமலை ரோடு இ.எம்.எம். மெயின் வீதியை சேர்ந்தவர் ராஜ் (வயது40). இவர் பேக்கரி கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் மனைவி தைலா இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ராஜிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜ் வேலைக்குச் சென்று வந்த நிலையில் வீட்டுக்கு சம்பளத்தை தொகையை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று இரவு கணவன் மனைவி இரண்டு பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த ராஜ் வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து ராஜுவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து விட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News