செய்திகள்
விஷம்

காஞ்சிக்கோயில் அருகே கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2019-07-23 10:07 GMT   |   Update On 2019-07-23 10:07 GMT
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் ஆவாரங்காட்டுவலசு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது42). கூலி தொழிலாளி.

இவரது மனைவி சுமதி(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கும் சுமதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் சுமதி கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதன்காரணமாக மனவேதனையில் இருந்த வேலுச்சாமி சம்பவத்தன்று வி‌ஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வேலுச்சாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேலுசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News