செய்திகள்
விருத்தாசலம் அருகே அரசு டாஸ்மாக் கடை விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி
விருத்தாசலம் அருகே அரசு டாஸ்மாக் கடை விற்பனையார்களை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் விற்பனையாளர்களான வீராசாமி, சுந்தர் (வயது 45) ஆகிய இருவரும் நேற்று இரவு 12 மணிக்கு பணி முடிந்ததும் விற்பனையான ரூ. 3 லட்சத்தை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு கடையில் இருந்து புறப்பட்டனர்.
விவசாய நிலங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் திடீரென விற்பனையாளர்களை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் கையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட விற்பனையாளர்கள் அந்த பணத்துடன் இருந்த பேக்கை வயலில் தூக்கி எரிந்துவிட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து விற்பனையாளர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று மர்ம நபர்களை வலைவீசி தேடினர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து விற்பனையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தாக்கி ரூபாய் 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் விற்பனையாளர்களான வீராசாமி, சுந்தர் (வயது 45) ஆகிய இருவரும் நேற்று இரவு 12 மணிக்கு பணி முடிந்ததும் விற்பனையான ரூ. 3 லட்சத்தை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு கடையில் இருந்து புறப்பட்டனர்.
விவசாய நிலங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் திடீரென விற்பனையாளர்களை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் கையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட விற்பனையாளர்கள் அந்த பணத்துடன் இருந்த பேக்கை வயலில் தூக்கி எரிந்துவிட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து விற்பனையாளர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று மர்ம நபர்களை வலைவீசி தேடினர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து விற்பனையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தாக்கி ரூபாய் 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.