செய்திகள்
கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிள் மோதல் - 2 பேர் பலி
கொடுமுடி அருகில் வெள்ளோட்டாம் பரப்பு பஸ் நிறுத்தம் அருகில் எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
கொடுமுடி:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை காந்தி புரம் கிழக்கு வீதியில் வசிக்கும் சவுந்தர்ராஜ் என்பவர் மகன் பிரபு (வயது 22) என்பவர் நேற்று மாலை கரூரை சேர்ந்த மண்மங்களம் பகுதியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 27) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்துள்ளார்.
அப்போது எதிரே பைக்கில் வந்த பாசூர் பழனிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் இளங்கோவன் (38) பிரபு வந்த பைக்கின் மீது மோதி இதில் கீழே விழுந்த மூவரில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிர் இழந்தார். மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவனும் உயிரிழந்தார். இறந்து போன பிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை இறந்து போன இளங்கோவனுக்கு கனகா (வயது 27) என்ற மனைவியும் பவித்ரா (வயது 5) அசுவிதா (வயது 4) என்ற இரண்டு பெண் குழந்தையும் உள்ளன. இது குறித்து தகவலறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை காந்தி புரம் கிழக்கு வீதியில் வசிக்கும் சவுந்தர்ராஜ் என்பவர் மகன் பிரபு (வயது 22) என்பவர் நேற்று மாலை கரூரை சேர்ந்த மண்மங்களம் பகுதியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 27) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்துள்ளார்.
அப்போது எதிரே பைக்கில் வந்த பாசூர் பழனிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் இளங்கோவன் (38) பிரபு வந்த பைக்கின் மீது மோதி இதில் கீழே விழுந்த மூவரில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிர் இழந்தார். மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவனும் உயிரிழந்தார். இறந்து போன பிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை இறந்து போன இளங்கோவனுக்கு கனகா (வயது 27) என்ற மனைவியும் பவித்ரா (வயது 5) அசுவிதா (வயது 4) என்ற இரண்டு பெண் குழந்தையும் உள்ளன. இது குறித்து தகவலறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.