செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்

Published On 2019-07-18 09:51 GMT   |   Update On 2019-07-18 09:51 GMT
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:

கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 19). இவர் சத்தியமங்கலம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பணி முடிந்ததும் கட்டிங் மிஷினை சுற்றி மடக்கி வைத்து கொண்டிருந்தார்.

அந்த கட்டிங் மிஷினில் மின் வயர் தேய்ந்து மின் கம்பி வெளியே தெரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது கை தெரியாமல் படவே அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ரகீமை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News