செய்திகள்
வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை
வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. புதிய பஸ்நிலையம் அருகே ஆற்காடு சாலை, காமராஜர் சிலை அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல் அதிகமாகவே காணப்பட்டது. பகலில் 98.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. அதன்பின்னர் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. புதிய பஸ்நிலையம் அருகே ஆற்காடு சாலை, காமராஜர் சிலை அருகே தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.