செய்திகள்
காட்டுமன்னார்கோவிலில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் திடீர் மரணம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உருத்திர சோலை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). நேற்று இவரது வீட்டுக்கு காட்டுமன்னார்கோவில் போலீசார் வந்தனர். அவர்கள் வினோத்திடம் ஏ.டி.எம். மெஷினில் பணம் திருட்டுபோன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனகூறி வினோத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை வினோத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் இருந்து வினோத்தை காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை அறிந்ததும் வினோத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். போலீசார் தாக்கியதால் வினோத் இறந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உருத்திர சோலை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). நேற்று இவரது வீட்டுக்கு காட்டுமன்னார்கோவில் போலீசார் வந்தனர். அவர்கள் வினோத்திடம் ஏ.டி.எம். மெஷினில் பணம் திருட்டுபோன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனகூறி வினோத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை வினோத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் இருந்து வினோத்தை காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை அறிந்ததும் வினோத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். போலீசார் தாக்கியதால் வினோத் இறந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.