செய்திகள் (Tamil News)
விபத்து

காரைக்குடி அருகே செட்டிநாட்டில் வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-07-10 09:24 GMT   |   Update On 2019-07-10 09:24 GMT
காரைக்குடி அருகே வாகனம் மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

காரைக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள குறுந்தாடி பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சிவா(வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-ராமேசுவரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோரம் மொபட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் சிவா ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவா மீது ஏறிவிட்டு சென்றது. இதில் உடல்நசுங்கி சிவா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News