செய்திகள்

தாளவாடி அருகே கார் ரோட்டோரம் கவிழ்ந்தது: டிரைவர் பலி

Published On 2019-06-12 13:12 GMT   |   Update On 2019-06-12 13:12 GMT
தாளவாடி அருகே இன்று காலை கார் ரோட்டோரம் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி இக்கலூரை சேர்ந்தவர் சிக்கு வீரப்பா இவரது மகன் மது (வயது 19). பெங்களூரில் கால்டாக்சி டிரைவராக மது வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் காரில் மது தனது சொந்த ஊரான தாளவாடி அடுத்த இக்கலூர் வந்தார்.

இன்று காலை அவர் தனது நண்பர்களான மனோஜ்குமார் (18), மல்லு (18), வீரபட்சா (17), சித்தராஜ் ஆகிய 5 பேர் இக்கலூரில் இருந்து தாளவாடிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

தாளவாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். மது காரை ஓட்டி வந்தார். காலை 9.15 மணி அளவில் இக்கலூர் அருகே ஒரு வளைவில் கார் திரும்பிய போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதில் காரை ஓட்டி வந்த மது வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மற்ற 4 பேரும் தாளவாடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News