செய்திகள்
கோபி அருகே குடும்ப தகராறில் விவசாயி மனைவி தற்கொலை
கோபி அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த விவசாயி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:
கோபியை அருகே உள்ள நாகப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் விவசாயி. இரவது மனைவி மனிஷா (வயது 25).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட வேதனை அடைந்த மனிஷா விஷம் குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்,
ஆனால் செல்லும் வழியிலேயே மனிஷா பரிதாபமாக இறந்து விட்டார். கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.