செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி

Published On 2019-06-06 20:00 IST   |   Update On 2019-06-06 20:00:00 IST
பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்தவர் கவின் (வயது 20). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் உக்கரத்திலிருந்து புளியம்பட்டிக்கு இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே புளியம்பட்டி பகுதியிலிருந்து ஒரு வாலிபர் காவிலிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புளியம்பட்டி அருகே வடுகம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் வேகமாக மோதிக் கொண்டது.

இதில் 2 பேருக்கும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News