செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல் கேபிள் திருட்டு

Published On 2019-06-03 15:34 IST   |   Update On 2019-06-03 15:34:00 IST
வேதாரண்யம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல் கேபிள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் மத்திய தொலை தொடர்பு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலிருந்து வேதாரண்யம் பகுதியில் உள்ள கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், செம்போடை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பூமியின் அடியில் புதைத்து கேபிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணி, சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதனால் ஆங்காங்கே பள்ளம் தோண்டும் போது கேபிள் ஒயரை வெளியில் போட்டு ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் கேபிள் ஒயர்களை ஆங்காங்கே துண்டித்து எடுத்து சென்று விடுகின்றனர்.

இது குறித்து வேதாரண்யம் பி.எஸ்.என்.எல் பொறியாளர் ராமச்சந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேபிள் ஒயர்கள் திருட்டு போய் உள்ளதாக கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Similar News