செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் கடையில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய பெண் கைது

Published On 2019-06-02 17:01 IST   |   Update On 2019-06-02 17:01:00 IST
எம்.ஜி.ஆர். நகரில் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் செயினை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

போரூர்:

எம்.ஜி.ஆர். நகர், சூளைபள்ளம் வெங்கட் ராமன் சாலையில் சுனில் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் கெணா ராம்.

நேற்று மாலை இவரது கடைக்கு டிப் டாப் உடை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். நகை வாங்குவது போல ஏராளமான நகைகளை வாங்கி பார்த்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவர் நாளை திரும்பி வந்து நகை வாங்குவதாக கூறி கடையில் இருந்து சென்று விட்டார்.

அப்போது ஊழியர்கள் நகைகளை சரி பார்த்தபோது 2 பவுன் செயின் மாயமானது தெரிந்தது.

அதனை டிப்-டாப் இளம் பெண் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண் கே.கே. நகர் பாரதிதாசன் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர் தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சுமதி என்பது தெரிந்தது. குடும்ப வறுமை காரணமாக நகை திருட்டில் ஈடுபட்டதாக அவர் கூறி உள்ளார்.

Similar News