செய்திகள்
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர், திருநெல்வேலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததோடு அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அம்மா மற்றும் குடும்பத்தினரை பார்ப்பதற்காக தீபக் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக், குடிபோதையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர், திருநெல்வேலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததோடு அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அம்மா மற்றும் குடும்பத்தினரை பார்ப்பதற்காக தீபக் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், புதுக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக், குடிபோதையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.